Covaxin: AIIMS தில்லியில் 2-6 வயது குழந்தைகளுக்கு 2வது டோஸ் பரிசோதனை விரைவில்

எய்ட்ஸ் டெல்லி அடுத்த வாரத்திற்குள் 2-6 வயது குழந்தைகளுக்கு  பாரத் பயோடெக்கின் கோவாக்சின் இரண்டாவது டோஸ் செலுத்தி  சோதனையைத் தொடங்க உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2021, 09:42 AM IST
  • பாரத் பயோடெக் அடுத்த வாரம் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் 2வது டோஸ் வழங்கும்.
  • முதல் சோதனை 12-18 வயதுக்குட்பட்டவர்களிடம் தொடங்கப்பட்டது.
  • அதன்பிறகு 6-12 வயது மற்றும் 2-6 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்தி தற்போது பரிசோதனை செய்யப்படுகிறது.
Covaxin: AIIMS தில்லியில் 2-6 வயது குழந்தைகளுக்கு 2வது டோஸ் பரிசோதனை விரைவில் title=

புதுடெல்லி: புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) 2-6 வயது குழந்தைகளுக்கான பாரத் பயோடெக்கின் கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் இரண்டாவது டோஸ் பரிசோதனையைத் தொடங்கவுள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 22, 2021) குழந்தைகளுக்கான COVID-19 தடுப்பூசி பரிசோதனைகளின் ஒரு பகுதியாக, பாரத் பயோடெக் அடுத்த வாரம் 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் இரண்டாவது டோஸை வழங்க வாய்ப்புள்ளது என ANI செய்தி வெளியிட்டுள்ளது. 

மேற்கூறிய வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஏற்கனவே கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தில்லி எய்ம்ஸ்,  18 வயதிற்குட்பட்டவர்களுக்கு Corona Virus தடுப்பூசி பரிசோதனை செய்யும் மையங்களில் ஒன்றாகும். கோவாக்சின் இரண்டாவது டோஸ் ஏற்கனவே 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டெல்லியின் எய்ம்ஸில் வழங்கப்பட்டுள்ளது என்று எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடுதலாக, மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் அனைத்து வயதினரின் சோதனைகள் முடிந்த ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பிரிவுகளாக பிரித்து மூன்று கட்டங்களாக பரிசோதனை நடத்தப்படுகிறது.

ALSO READ | கொரோனா 3வது அலை எப்போது; ICMR கூறுவது என்ன

முதல் சோதனை 12-18 வயதுக்குட்பட்டவர்களில் தொடங்கப்பட்டது, அதன்பிறகு 6-12 வயது மற்றும் 2-6 வயதுக்குட்பட்டவர்கள் தற்போது சோதனைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

அண்மையில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் -19 தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகள் விரைவில் நிறைவடையும் என்று மத்திய அரசு தில்லி உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதற்கிடையில், ஜைடஸ் காடிலாவின் (Zydus Cadila) DNA தடுப்பூசி 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டதாக அரசாங்க அதிகாரிகள் முன்னதாக உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தனர்.

தற்போது, இந்தியாவில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் கோவேக்ஸின், ஸ்பூட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள்  வழங்கப்பட்டு வருகின்றன. இது வரை 41 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Monkey B Virus: தொற்று அறிகுறிகள், சிகிச்சை, பிற முக்கிய விபரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News