முகப்பரு மற்றும் தழும்புகள் நீங்க எளிய வழிகள்!

முகப்பருவை தடுக்க உங்கள் உடல் ஹைட்ரேட்டாக இருப்பது அவசியமானதாகும், தினமும் போதுமான நீர் குடிப்பது, பழசாறு அருந்துவது போன்றவற்றை செய்யலாம்.  

Written by - RK Spark | Last Updated : Sep 26, 2022, 06:02 AM IST
  • சருமம் என்ன வகை என்பதை தெரிந்துகொண்டு தோல் மருத்துவரிடம் சிகிச்சை முக்கியம்.
  • தினமும் போதுமான நீர் குடிப்பது, பழசாறு அருந்துவது போன்றவற்றை செய்யலாம்.
  • பொதுவெளியில் கண்ட இடங்களில் நாம் கைகளை வைப்பதால் பாக்டீரியாக்கள் கைகளில் ஒட்டிக்கொள்கிறது.
முகப்பரு மற்றும் தழும்புகள் நீங்க எளிய வழிகள்!  title=

முகப்பரு வருவது சாதாரணமான ஒன்று, நாம் சில எளிய வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் அந்த பருக்களையும், அது ஏற்படுத்திய தழும்புகளையும் நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ளலாம்.  முதலில் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியமான ஒன்று, முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய், அழுக்கு போன்றவற்றை நீக்குவது முக்கியம்.  அதற்காக அதிகமாக முகத்தை கழுவினால் முகத்திலுள்ள எண்ணெய் சுரப்பிகள் குறைந்து முகத்தில் பருக்களும், வெடிப்பும் ஏற்படும்.  அதிகமாக முகப்பரு இருப்பவர்கள் முதலில் உங்களுடைய சருமம் என்ன வகை என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப தோல் மருத்துவரிடம் நீங்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.  முகப்பருவை தடுக்க உங்கள் உடல் ஹைட்ரேட்டாக இருப்பது அவசியமானதாகும், தினமும் போதுமான நீர் குடிப்பது, பழசாறு அருந்துவது போன்றவற்றை செய்யலாம்.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கலாமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

மேலும் தினமும் முகத்திற்கு மாய்ஸ்ச்சரைசர் போடுவது உங்கள் முகத்தை ஹைட்ரேட்டாக வைக்கவும், பருக்களை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.  உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தி பருக்களை தடுக்கலாம்.  பென்சாயில் பெராக்ஸைடு, சாலிசிலிக் அமிலம், சல்ஃபர் போன்றவை காலண்டஹ் மருந்துகளை பயன்படுத்துவதும் முகப்பருவுக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.  ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக்குங்கள்.  முகப்பரு வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அதற்கு மேல் அதிகம் மேக்கப் போடுவது மிகவும் தவறான செயல்.  அப்படி அதிகமாக மேக்கப் போடுவதால் முகப்பரு இன்னும் தீவிரமாகமே தவிர, குறையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவெளியில் கண்ட இடங்களில் நாம் கைகளை வைப்பதால் பாக்டீரியாக்கள் கைகளில் ஒட்டிக்கொள்கிறது, அந்த கைகளை நாம் முகத்தில் வைக்கும்பொழுது முகத்தில் கிருமிகள் தொற்றி பருக்கள் உருவாகிறது.  அதனால் அடிக்கடி முகத்தைய் தொடும் பழக்கத்தை கைவிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  பருக்களை அடிக்கடி தொடுவது, கிள்ளுவது போன்றவற்றை செய்வது தவறான பழக்கம், அதேபோல அதிகமாக வெயிலில் சுற்றினாலும் பருக்கள் வரும்.  தினமும் முகத்திற்கு டீ-ட்ரீ எண்ணெய் பயன்படுத்துவதால் முகப்பரு குறைந்து முகம் பொலிவடையும், அடுத்ததாக பிரெஞ்சு க்ரீன் களிமண்ணை முகத்தில் பேஸ்பேக் போல தடவுவதாலும் பருக்கள் வராமல் தடுக்கலாம்.  அதிகளவில் எண்ணெயில் பொறித்த உணவுகள், பால் பொருட்கள், சர்க்கரை பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தோன்றும்: எச்சரிக்கையாக இருங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News