பூண்டை பாலுடன் சேர்த்துக் குடித்தால் எவ்வளவு நன்மை தெரியுமா?

பாலுடம் பூண்டு சேர்த்து குடித்து வந்தால் எவ்வளவு நன்மை என்பது பற்றி தெரிந்து கொள்ள இதை படியுங்கள். 

Last Updated : Jan 18, 2018, 04:56 PM IST
பூண்டை பாலுடன் சேர்த்துக் குடித்தால் எவ்வளவு நன்மை தெரியுமா? title=

நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொருள்தான் பூண்டும், பாலும். பூண்டு சேர்த்த பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இந்த பூண்டு கலந்த பாலை குடிப்பதால் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

> நமக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், நீங்கள் முதலில் செய்யவேண்டியது  பூண்டு சேர்த்த பாலைக் குடிப்பது. இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சல் உடனயாக குறைந்துவிடும்.

> நமது முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாக தடுத்துவிடும் இந்த பூண்டு கலந்த பால். 

> குழந்தை பெற்ற பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதோடு பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.

> செரிமானம் பிரச்சனை இருந்தால் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனென்றால் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.

> அதுமட்டுமல்லாது, பூண்டு கலந்த பாலைக் குடித்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கிருமிகள் அழியும். தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டு கலந்த பாலை குடிக்க வேண்டும்.

Trending News