மாரடைப்பு வராமல் தடுக்க வேண்டுமா; இந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

மாரடைப்பு அபாயத்தை தடுக்க சில பழங்களை உட்கொள்ளவது நல்ல பலனைத் தரும்; இதனால் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும்.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 15, 2022, 09:17 PM IST
  • இதய நோயாளிகள் ஆப்பிளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராகி, மாரடைப்பு அபாயம் குறையும்.
  • இதயத்தில் அடைப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை உட்கொள்ள வேண்டும்
மாரடைப்பு வராமல் தடுக்க வேண்டுமா; இந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் title=

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள்: இதய நோயாளிகள் மட்டுமல்ல, இன்றைய வாழ்க்கை முறையில், அனைவருமே, தங்கள் இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு முறை மாரடைப்பு வந்த நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

சரியான நேரத்தில் சாப்பிடுவதிலிருந்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் உட்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால், மாரடைப்பு அபாயத்தை தடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பழங்களை உட்கொள்வதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராகி, மாரடைப்பு அபாயம் குறையும்.

1. பெர்ரியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் பெர்ரிகளை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது இதயத்தை பாதுகாப்பாக வைத்து கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

2. ராஸ்பெர்ரி இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்

இது தவிர, ரஸ்பெர்ரி இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சிறியதாக காணப்படும் இந்தப் பழத்தை நாக்கில் வைத்தவுடன் எளிதில் கரைந்துவிடும். உண்மையில், இதை சாப்பிடுவதன் மூலம், இதயத்திற்கு இரத்தத்தை சென்றடையும் நரம்புகள் பிட் ஆக இருக்கும். இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை

3. திராட்சையும் நன்மை பயக்கும்

திராட்சை இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். திராட்சையில் அதிக அளவிலான பாலிபினால்கள் மற்றும் பினாலிக் அமிலங்கள் உள்ளன. இதன் காரணமாக உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படும். இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

4. ஆப்பிள் இதய நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்

இது தவிர இதய நோயாளிகள் ஆப்பிளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதய நோயாளிகளுக்கு ஆப்பிள் ஒரு சஞ்சீவி என்று நம்பப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் அல்லது இதயத்தில் அடைப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News