தொப்பை கொழுப்பு கரைய வேண்டுமா உடனடியாக இதை செய்யுங்கள்

Benefits of drinking flaxseed water: ஆளி விதையில் உள்ள பண்புகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆளிவிதை நீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 8, 2022, 11:23 AM IST
  • ஆளி விதை நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்
  • ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும்
தொப்பை கொழுப்பு கரைய வேண்டுமா உடனடியாக இதை செய்யுங்கள் title=

ஆளிவிதை ஆரோக்கியத்திற்கு சிறந்த சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. ஆளி விதையில் உள்ள பண்புகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஒரு முக்கிய பண்பாகும். மறுபுறம், ஆளிவிதை உட்கொள்வதால் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். மறுபுறம், ஆளி விதையிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது உடலின் பல நோய்களைக் குணப்படுத்துகிறது. ஆளிவிதை நீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பாரப்போம்.

ஆளி விதை நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நீரிழிவு பிரச்சனையில் நன்மை பயக்கும்
நீரிழிவு நோயாளிகள் ஆளிவிதை தண்ணீரைக் குடிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். இதன் நுகர்வு உங்கள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். அதனால்தான் ஆளி விதையின் தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் மா இலைகள்; பயன்படுத்துவது எப்படி 

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 
உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆளி விதை நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆளி விதையில் உள்ள பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆளி விதை நீரை தினமும் காலையில் குடிப்பதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

உடல் எடை குறைக்க உதவும் 
உடல் எடையை குறைக்க, ஆளி விதையில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள பண்புகள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். எனவே நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால் தினமும் ஆளி விதை நீரை குடிக்க ஆரம்பியுங்கள்.

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்
ஆளிவிதையில் ஒமேகா-3 ஏராளமாக உள்ளது, எனவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் சருமத்தை அதிக ஈரப்பதமாக்க உதவும். இதனுடன், உடலின் ஈரப்பதத்தை பராமரிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது
ஆளி விதையில் புற்றுநோய்க்கு எதிரான ஹார்மோன்களின் கூறுகள் காணப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், தினமும் ஒரு சிட்டிகை ஆளி விதையை மட்டும் சாப்பிட்டு வந்தால், புரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற அபாயங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும். அதனால்தான் ஆளிவிதையை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆளிவிதையை உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காரணம் இதுதான்.

ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும்
ஆளி விதை ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய உதவும். அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் கர்ப்பப்பைச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தப்பி தவறி கூட முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News