நீரிழிவு முதல் கீல்வாதம் வரை... முருங்கை இலை கஷாயம் செய்யும் மாயங்கள்!

நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. அதோடு, மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2023, 01:03 PM IST
  • முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது.
  • உடலில் ஏற்படும் 70 சதவீதம் நோய்கள் குணமாகும்.
  • முருங்கை இலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
நீரிழிவு முதல் கீல்வாதம் வரை... முருங்கை இலை கஷாயம் செய்யும் மாயங்கள்! title=

முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் என எல்லாமே ஆரோக்கிய  நன்மை நிறைந்தது. இதன் நன்மைகளை உணர்ந்த நம் முன்னோர்கள் இதை சமையலில் பயன்படுத்தி வந்தார்கள்.  முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை பொறியல், சாம்பார்  என எந்த வகையில் சமைத்தாலும் சுவையாக இருப்பதோடு, நம் ஆரோக்கியத்தை பேணவும் உதவி செய்கிறது. நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. அதோடு, மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது. எனவே இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், ரத்த சோகை முற்றிலும் நீங்கும். துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் இதில் காணப்படுகின்றன. மேலும், இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொண்டால், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல முக்கிய சத்துக்கள் கிடைக்கும்.

முருங்கை இலையில் இருந்து தயாரிக்கப்படும் முருங்கை டீ அல்லது கஷாயத்தை, தினமும் வெறும் வயிற்றில் குடிக்க ஆரம்பித்தால், உடலில் ஏற்படும் 70 சதவீதம் நோய்கள் குணமாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. எனவே இதன் கஷாயத்தை குடிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்: 

இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த முருங்கை இலை கஷாயம் உதவியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இரத்த அழுத்தம் குறித்த இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், முருங்கைகாய் கஷாயம் அருந்திய பங்கேற்பாளர்களுக்கு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கீல்வாதம் - யூரிக் அமிலம் 

முருங்கை டீயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இந்த கலவைகள் முழு உடலிலும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன, இதன் காரணமாக உடலில் உள்ள யூரிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் கீல்வாதத்தின் வலியும் குறையத் தொடங்குகிறது.

நீரிழிவு - கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்

முருங்கைக்காய் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இயற்கையான இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. இதனுடன், இதன் இலைகள் நீரிழிவு நோயில் சிறந்த நன்மை பயக்கும். கொலஸ்ட்ராலைக் குறைக்க - முருங்கைக்காயை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதயத்தை சிறப்பாகச் செயல்பட வைக்கிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலம் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இவை இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

மேலும் படிக்க | காலை எழுந்தவுடன் முதலில் தண்ணி குடிங்க: நம்ப முடியாத நன்மைகள் நடக்கும்

எடை இழப்பு

முருங்கை இலை கஷாயம் உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை குறைப்பதன் மூலம் எடை குறைக்க உதவுகிறது. இது கலோரிகளில் குறைவாக உள்ளது, இது சர்க்கரை கலந்த பானங்களுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது. கூடுதலாக, முருங்கை இலை கஷாயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

முருங்கை கஷாயத்திக் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.  இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அவசியம்.

முதுமையை விரட்டும்

முருங்கை டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன,. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் ட்முதுமை நெருங்காமல் இருக்கும். கூடுதலாக, முருங்கை கஷாயத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் சேர்மங்கள் உள்ளன. இது சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க்க உதவும்.

குடல் நோய்கள் நீங்கும்

 முருங்கை தேநீர் குடலில் உள்ள வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிப்பதன் மூலமும் செரிமானத்திற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்க வழிவகுக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News