மக்களவை தேர்தளுக்கு பின் முதல் முறையாக ராகுல் காந்தி அமேதி வருகை!

மக்களவை தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி இன்று அமேதி மக்களை சந்திக்க உள்ளார்!!

Last Updated : Jul 10, 2019, 07:44 AM IST
மக்களவை தேர்தளுக்கு பின் முதல் முறையாக ராகுல் காந்தி அமேதி வருகை!  title=

மக்களவை தேர்தல் தோல்வியின் பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி இன்று அமேதி மக்களை சந்திக்க உள்ளார்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அமேதி தொகுதியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.

அமேதி தொகுதியில், ஸ்மிருதி இராணியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்தது அவருக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது. இந்தநிலையில், பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக இன்று அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்கிறார்.

ஒரு நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று காலை அமேதி வரும் ராகுல் காந்தி இரு இடங்களில் காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என உத்திர பிரதேசம் சட்டமன்ற காங்கிரஸ் மேல்சபை  உறுப்பினர் தீபக் சிங் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் 2019 இல் 52 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸுக்கு டைம்ஸ் கடினமானது. ராகுலுக்கு டைம்ஸ் கடுமையானது, அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் உறுதியாக இருக்கிறார். பல அரசியல் அனலிசிஸ்டுகள் அவருக்கு வேறு வழியில்லை என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் மக்களவைத் தேர்தலில் 2014 ல் ஒரு முழுமையான குடிப்பழக்கத்திற்குப் பிறகு காங்கிரஸின் மறுபிரவேசத்தை அவரால் வழிநடத்த முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், அமேதியிடமிருந்து வெற்றிபெறத் தவறிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News