கர்நாடக இடைத்தேர்தல்; காங்., வேட்பாளர் பட்டியல் வெளியானது!

கர்நாடகாவில் வரும் டிசம்பர் 5-ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களில் 8 பேர் பெயர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது!

Last Updated : Nov 1, 2019, 08:49 AM IST
கர்நாடக இடைத்தேர்தல்; காங்., வேட்பாளர் பட்டியல் வெளியானது! title=

கர்நாடகாவில் வரும் டிசம்பர் 5-ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களில் 8 பேர் பெயர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது!

"கர்நாடகாவில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான 8 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் புதுடில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். விரைவில் மீதமுள்ள ஏழு இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களை கட்சி அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வேட்பாளர்களின் பெயர்கள்: பீம்மண்ண நாயக் (யெல்லாப்பூர்), பி.எச். பன்னிகோட் (ஹிரேகூர்), கே.பி. கோலிவாட் (ரன்னேபென்னூர்), எம்.அஞ்சனப்பா (சிக்கபல்லாபூர்), எம்.நாராயணசாமி (கே.ஆர்.புரா), எம்.சிவராஜ் (மகாலட்சுமி லேயவுட்), பத்மாவதி சுரேஷ் (ஹோஸ்கோட்) மற்றும் எச்.பி. மஞ்சுநாத் (ஹன்சூர்).

14 காங்கிரஸ் மற்றும் 3 ஜனதா தளம்-மதச்சார்பற்ற (JDS) கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களைத் தொடர்ந்து கர்நாடகாவில் இடைத்தேர்தல்கள் கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. .

2018 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மஸ்கி (தனி), ஆர்.ஆர்.நகர் தொகுதி முடிவுகள் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், குறித்து இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இன்னும் தனது தீர்ப்பை வழங்காத நிலையில் இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக., 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-ஜே.டி.எஸ் அரசாங்கம் இந்த எம்.எல்.ஏ.க்கள் விலகலால் ஜூலை 23 அன்று பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட முறிவின் விலைவால், காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் ஆகியவை தனித்தனியாக இடைத்தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

முன்னதாக, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவுக்கான சட்டமன்றத் தேர்தலுடன் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் கூட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த இடைத்தேர்தலை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending News