நீட் தேர்வு தோல்வி மாணவி தற்கொலை: திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

NEET-தகுதி தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்!  

Last Updated : Jun 5, 2018, 12:17 PM IST
நீட் தேர்வு தோல்வி மாணவி தற்கொலை: திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்! title=

12:15 05-06-2018
NEET-தகுதி தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்!

இது தொடர்பாக அவர் கூறும்போது,,! நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் பல கேள்விகள் தவறாக இருந்ததால் மாணவி தற்கொலை செய்துள்ளார் என்றும் தமிழ் மொழி மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தவறான கேள்விகள் கேட்டுள்ளது என்றும் கூறினார். கடந்த ஆண்டு அனிதாவை இழந்தோமம், இந்த ஆண்டு பிரதீபாவை இழந்துள்ளோம் என்றும் அவர் கூறினார். மேலும் அவர், இந்த நீட் தேர்வால் இனி எத்தனை உயிர்கள் பலி ஆகப் பேகிறதோ என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.  


நீட் தேர்வு ரத்து செய்வது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வர திமுக திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வில் தோல்வியைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் மாணவி பிரதீபா 1,125 மதிபெண்கள் எடுத்திருந்தார். 

ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறது. நீதி நிர்வாகம், சட்டத்துறைக்கு நிதி கோரும் தீர்மானம் மீது சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற உள்ளது. 

அப்போது பேசிய  திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,,! இன்னும் எத்தனை அனிதா, பிரதீபாக்களை இழக்க போகிறோம் என்றும் நீட் தேவில் இருந்து விலக்கு பெற அரசு என்ன செய்தது என்றும் கேள்வி எழுப்பி வருகிறார் 

 

Trending News