கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்!

சென்னையில் போக்குவரத்துத்துறைக்கான கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது!

Last Updated : Apr 30, 2018, 11:12 AM IST
கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்!  title=

சென்னையில் போக்குவரத்துத்துறைக்கான கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது! 

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதம் நிறைவடைந்த நிலையில், புதிதாக உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்களுக்கான உத்தரவை தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்களுக்கு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  

இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தலாம் ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை மே மாதம் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று சென்னையில் போக்குவரத்துத்துறை கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது. மே மாதம் 7-ம் தேதி நடைபெற இருக்கும் போக்குவரத்துத்துறை கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று சென்னையில் 3 மையங்களில் தொடங்கியது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் தேனாம்பேட்டையில் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் வீடியோ பதிவு செய்யப்படுகிறது எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். 

Trending News