ஜாக்பாட் செய்தி: மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்... உத்தரவு வெளியானது

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 5, 2024, 02:56 PM IST
  • பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
  • தேசிய ஓய்வூதிய அமைப்பு என்றால் என்ன?
  • 26,000 ஊழியர்கள் பலன்களைப் பெறுவார்கள்.
ஜாக்பாட் செய்தி: மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்... உத்தரவு வெளியானது title=

Old Pension Scheme: சமீபகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) தொடர்ந்து போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தினமும் பல புதுப்பிகளும் வந்துகொண்டு இருக்கின்றன.  

இந்த நிலையில், தற்போது மற்றொரு மாநில அரசு ஊழியர்களுக்கு (State Government Employees)நல்ல செய்தி வந்துள்ளது. மகாராஷ்டிர அரசு, பழைய ஓய்வூதியம் பற்றிய ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிர அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவின் கீழ், நவம்பர் 2005 க்குப் பிறகு வேலையைத் தொடங்கிய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) பலன்களைப் பெறுவதற்கான வசதி வழங்கப்படும்.

ஓபிஎஸ் கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசு மற்றும் செமி கவர்ண்மெண்ட் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்த சில நாட்களுக்குப் பிறகு அரசின் இந்த முடிவு வந்துள்ளது. நவம்பர் 2005 க்குப் பிறகு பணியைத் தொடங்கிய ஊழியர்களுக்கு ஓபிஎஸ் விருப்பத்தை வழங்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் அலுவலகம் (சிஎம்ஓ) தெரிவித்துள்ளது.

26,000 ஊழியர்கள் பலன்களைப் பெறுவார்கள்

மகாராஷ்டிர அரசு ஊழியர் சங்க செயலாளர் விஸ்வாஸ் கட்கர், 'அமைச்சரவையின் இந்த முடிவு நவம்பர் 2005க்கு முன் தேர்வு செய்யப்பட்டு, ஆனால், பணி நியமன கடிதம் பின்னர் கிடைத்த 26,000 அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கும். இந்த முடிவால் மாநில அரசின் இந்த 26,000 ஊழியர்கள் பயனடைவார்கள்.' என்று கூறினார். 26,000 ஊழியர்கள் ஆறு மாதங்களுக்குள் ஓபிஎஸ் (OPS) மற்றும் தெசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அவர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் தங்கள் துறைகளுக்கு அவற்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | Tax Evasion Penalty: தெரியாமகூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க... அபராதம் முழி பிதுங்க வைக்கும்!!

பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? (What is Old Pension Scheme)

பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) 1952 இல் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் பாதிக்கு இணையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசாங்கத்தால் உயர்த்தப்படும் அகவிலை நிவாரண உதவித்தொகை ஓய்வூதியத் தொகைக்கும் பொருந்தும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் பெற வழிவகை உள்ளது. ஓபிஎஸ் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

தேசிய ஓய்வூதிய அமைப்பு என்றால் என்ன? (What is National Pension System)

தேசிய ஓய்வூதிய முறை (National Pension Scheme) ஜனவரி 1, 2004 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக அமல்படுத்தப்பட்டது. NPS என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இதன் பொருள் ஊழியர்கள் தங்கள் சேவையின் போது ஒரு நிலையான தொகையை வழங்குகிறார்கள். ஓய்வுக்குப் பிறகு, அவர்கள் செய்த முதலீட்டின் அடிப்படையில் ஊழியர்கள் ஓய்வூதியத்தைப் (Pension) பெறுகிறார்கள். இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட இது குறைவான பலனைத் தருவதாகக் கருதப்படுகிறது. இது ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு வழக்கமான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. கடந்த சில நாட்களாகவே, பல மாநிலங்களில் உள்ள ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | இன்று முன் அதிரடியாய் குறையும் விமான கட்டணங்கள்... பயணிகள் ஹாப்பி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News