ரயில்வே டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி; எப்படி பெறுவது?

இந்திய ரயில்வே செப்டம்பர் 1 முதல் தனது சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஆன்லைன் டிக்கெட் எடுக்கும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.

Last Updated : Sep 14, 2019, 01:36 PM IST
ரயில்வே டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி; எப்படி பெறுவது? title=

இந்திய ரயில்வே செப்டம்பர் 1 முதல் தனது சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஆன்லைன் டிக்கெட் எடுக்கும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.

ஆனால், சொல்லப்போனால் நீங்கள் ரயிலில் பயணம் செய்து கட்டணத்தில் தள்ளுபடி விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. உண்மையில், இந்திய ரயில்வே மாணவர்கள், விவசாயிகள், ஏழைகள், நோயாளிகள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், ஊடகவியலாளர்கள், வேலையற்றோர், அரசு வேலை தயாரிப்பாளர்கள், ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பிறருக்கு ரயில் கட்டணத்தில் 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது.

இது தவிர, நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோருடன் பயணம் செய்பவர்களும் கட்டணத்தில் இந்த தள்ளுபடியைப் பெறுகிறார்கள். ஜெனரல் டிக்கெட் முதல் ஸ்லீப்பர், ஏசி முதல் வகுப்பு, ஏசி சேர் கார் மற்றும் ஏசி இரண்டாம் வகுப்பு வரையிலான டிக்கெட்டுகளில் இந்த சலுகையை ரயில்வே அளிக்கிறது. இந்த விலக்கையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இதற்கான படிவத்தை நிரப்ப வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் குறிப்பிட்ட தள்ளுபடி பெறுவீர்கள்.

ஒரு நோயாளி கட்டணம் சலுகையை விரும்பினால், அவர் மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும். மருத்துவரின் கையொப்பம் பெற்ற இக்கடிதத்தினை, சமர்பிதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த இரயில் கட்டண சேவையை பயன்படுத்திக்கொள்ள இயலும்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊனமுற்றோர், மன நோயாளிகள், புற்றுநோய் நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை / டயாலிசிஸுக்கு பயணிக்கும் சிறுநீரக நோயாளிகள், இதய அறுவை சிகிச்சைக்கு பயணிக்கும் இருதய நோயாளிகள் போன்றவர்களுக்கு ரயில்வே அதிகபட்சமாக 75% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Trending News