One rupee Coin value 1 lakh: ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்து லட்ச ரூபாய் பெறலாம்

ஒற்றை ரூபாய் நாணயத்திற்கு எப்போதுமே அலாதி மதிப்புண்டு. பில்லியன் கணக்கில் பணம் புரளும் விளையாட்டில் பூவா தலையா பார்ப்பதற்கு பயன்படுத்தப்படுவதும் ஒரு நாணயம் தான். நாணயத்தை நாணயமாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்று சொல்வார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 24, 2021, 08:12 AM IST
  • ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்து லட்ச ரூபாய் பெறலாம்
  • பழங்காலப் பொருட்களை விற்பனை செய்து கோடீஸ்வரர்கலாம்
  • இந்தியாவில் பல நாணயங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது
One rupee Coin value 1 lakh: ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்து லட்ச ரூபாய் பெறலாம் title=

ஒற்றை ரூபாய் நாணயத்திற்கு எப்போதுமே அலாதி மதிப்புண்டு. பில்லியன் கணக்கில் பணம் புரளும் விளையாட்டில் பூவா தலையா பார்ப்பதற்கு பயன்படுத்தப்படுவதும் ஒரு நாணயம் தான். நாணயத்தை நாணயமாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்று சொல்வார்கள்.

ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்தால், அதற்கு ஈடாக ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றால் யாரும் விட்டுவிடத் தயாராக இருக்க மாட்டார்கள். உங்களிடம் 1 ரூபாய் நாணயம் இருந்தால், அதற்கு பதிலாக இணையதளத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். அது எப்படி?

வலைத்தளங்களில் பழங்காலப் பொருட்களை விற்பனை செய்து மக்கள் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள் என்பதை அவ்வப்போது கேட்டிருக்கலாம்.
பழங்கால பொருட்களுக்கென்று சர்வதேச சந்தையில் எப்போதுமே முக்கியத்துவம் உண்டு.

Also Read | Family Man-2: இந்தி சீரியலை நிறுத்த தமிழ்நாட்டில் போர்க்கொடி ஏன்? 

தற்போது ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் அந்த வாய்ப்பை விரிவாக்கிவிட்டன. உங்களிடம் பழங்கால நாணயங்கள் இருந்தால் அவை உங்களை லட்சாதிபதியாக, ஏன் கோடீஸ்வரராகக் கூட மாற்றும். பழைய நாணயங்களை சேகரிக்கும் பொழுதுபோக்கும் அதிகமாகி வருவதைக் காணலாம்.
 
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் பல நாணயங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது, இதன் விளைவாக தற்போதுள்ள நாணயங்களின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அரியவகை நாணயங்களைத் தவிர, இந்தியாவில் பலரும் "ஷாப்பிங்" பிரியர்களாக இருக்கிறார்கள். தீபாவளி மற்றும் அக்ஷய த்ருதயை போன்ற பண்டிகைகளில் நாணயங்களை வாங்க விரும்புகிறார்கள்.

Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!

ஒரு நாணயத்தைப் பற்றியும், ஒரே கிளிக்கில் அது உங்களை எவ்வாறு லட்சாதிபதியாக்கும்  என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.

ஈ-காமர்ஸ் தளமான குயிக்ரில் (Quickr), 1862 ஆம் ஆண்டு முதல் அச்சடிக்கப்பட்ட விக்டோரியா மகாராணியின் உருவம் பொறித்த நாணயங்கள் விற்கப்படுகின்றன.

இந்த இணையதளத்தில், நாணயங்கள் ரூ .1.5 லட்சத்திற்கு விற்கப்படுகின்றன. 1862 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் அரிய நாணயங்களின் பிரிவில் வருகிறது. அந்த நாணயம் உங்களிடம் இருந்தால் 1.5 லட்சம் ரூபாய் உங்களுக்கே.

Also Read | இன்று முதல் மாத இறுதி வரை தமிழகத்தில் அனுமதி எதற்கு? தடையில்லா சேவை எவை?

உங்களிடம் இந்த அரிய ஒற்றை ரூபாய் நாணயம் இருந்தால் அதை Quickr தளத்தில் எவ்வாறு விற்க முடியும்?

முதலில் நீங்கள் தளத்தில் ஆன்லைன் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். நாணயத்தின் புகைப்படத்தைக் கிளிக் செய்து தளத்தில் பதிவேற்றவும்.

நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், வாங்குபவர் உங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வார்.  Quickr தளத்தின் கட்டணம் மற்றும் விநியோக விதிமுறைகளின்படி நீங்கள் நாணயத்தை விற்கலாம்.

Also Read | இன்றைய ராசிபலன், 24 மே 2021: திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News