ஒரிசாவில் 4-வயது சிறுமி வன்புணர்ச்சிக்கு ஆளான கொடூரம்!

ஒரிசாவை சேர்ந்த 4-வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Apr 30, 2018, 01:33 PM IST
ஒரிசாவில் 4-வயது சிறுமி வன்புணர்ச்சிக்கு ஆளான கொடூரம்! title=

ஒரிசாவை சேர்ந்த 4-வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

ஒரிசாவின் பாருந்தியா பகுதியை கிராமத்தை சேர்ந்த 4-வயது சிறுமியை அப்பகுதியை சேர்ந்த 45-வயது ஆண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் பெயர் ரன்ஜன் நாயக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கடந்த வியாழன் அன்று நிகழ்ந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று மாலை நாயக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து பாலசூரு பொதுமக்கள் தெரிவிக்கையில், ஒரிசாவில் இதுபோன்ற வன்புணர்ச்சி சம்பவங்கள் தொடர்சியாக நடைப்பெற்று வருகின்றன. ஆளும் கட்சியும் சரி, எதிர் கட்சியும் சரி இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

கடந்த 8 நாட்களில் மட்டும் கட்டக் மருத்துவமனையில் வன்புணர்ச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட சிறுமிகள் 6 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுதொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்!

Trending News