US Election 2020: அதிபர் தேர்தலில் வரலாறு காணாத வகையில் பதியும் அஞ்சல் வாக்குகள் ..!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது. இதில்  குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் (Donald Trump ), ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் (Joe Biden)போட்டியிடுகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2020, 07:34 PM IST
  • அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் (Donald Trump ), ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் (Joe Biden)போட்டியிடுகின்றனர்.
  • மெயில்-இன் வாக்குப்பதிவு தொடங்கிய 50 மாகாணங்களில், 31 அமெரிக்க மாகாணங்களில் இந்த புள்ளி விபரங்கள் வந்துள்ளன.
  • வரவிருக்கும் வாரங்களில் அதிகமான மாகாணங்களில் அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.
US Election 2020: அதிபர் தேர்தலில் வரலாறு காணாத வகையில் பதியும் அஞ்சல் வாக்குகள் ..!!! title=

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது. இதில்  குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் (Donald Trump ), ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் (Joe Biden)போட்டியிடுகின்றனர். 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகம் உள்ள நிலையில், அமெரிக்கர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்றால் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, வைரஸ் தொற்று அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அதிபர் தேர்தலுக்கான வாக்குகளை, அஞ்சல் மூலம் செலுத்தவே விரும்புகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், தபால் வாக்குச் சீட்டு முறையில், இதுவரை கிட்டத்தட்ட நாற்பது லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது இதுவரை இல்லாத அளவு பெரிய எண்ணிக்கையாகும்

வாக்களிப்பு தொடர்பான தரவை பராமரிக்கும் அமெரிக்க தேர்தல் அமைப்பு,ஆரம்ப கட்டத்தில் இதுவரை 3.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளதாகக் கூறியது, இது 2016 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், ஆரம்ப கட்டத்தில் தொட்ட 75,000 வாக்குகள் கூட பதிவாகவில்லை.

ALSO READ | சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்.. Donald Trump மீண்டும் முடிசூட்டிக் கொள்வாரா..!!!

இந்த அமைப்பை நிர்வகிக்கும் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மைக்கேல் மெக்டொனால்ட், மெயில்-இன் வாக்களிப்பில், அஞ்சல் மூலம் செலுத்தும் வாக்கு எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்வு காரணம், கொரோனா வைரஸ் பரவல் தான் எனக் கூறினார். இது பாதுகாப்பான முறை என மக்கள் நினைப்பதாக அவர் கூறினார்

"ஒரு தேர்தலுக்கு முன்னதாக, அஞ்சல் வாக்குகளை இந்த அளவிற்கு மக்கள் செலுத்தவில்லை" என்று செய்தி நிறுவன ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக இந்த அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை  ஒரு கேடியே 50 லட்சம் என்ற அளவிற்கு இருக்கலாம் என, மெக்டொனால்ட் கணித்துள்ளார், இது 1908 முதல் உள்ள புள்ளி விபரங்களைப் பார்த்தால் இது ஒரு சாதனை எண்ணிக்கையாகும்.

மெயில்-இன் வாக்குப்பதிவு தொடங்கிய 50 மாகாணங்களில், 31 அமெரிக்க மாகாணங்களில் இந்த புள்ளி விபரங்கள் வந்துள்ளன என்றும், வரவிருக்கும் வாரங்களில் அதிகமான மாகாணங்களில் அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் அவர் கூறினார்.

ALSO READ | கொரோனா தாண்டவம் 2வது முறை தொடங்கியதால், மீண்டும் லாக்டவுனை அறிவிக்கும் நாடுகள் எவை..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News