பணத்திற்காக தனது கணவரையே விற்ற கென்யா மனைவி!

கென்யா நாட்டை செர்ந்த இளம்பெண், பணத்திற்காக தனது கணவரை விற்றுள்ள விவகாரம் தற்போது பேரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jan 15, 2020, 11:39 AM IST
பணத்திற்காக தனது கணவரையே விற்ற கென்யா மனைவி! title=

கென்யா நாட்டை செர்ந்த இளம்பெண், பணத்திற்காக தனது கணவரை விற்றுள்ள விவகாரம் தற்போது பேரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

இதுபோன்ற குற்ற வழக்குகள் நாட்டிலிருந்தும் உலகத்திலிருந்தும் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. மற்றும் இதுபோன்ற வழக்குகள் நம்மை சிந்திக்க வைக்கவும் செய்கிறது. காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் கண்டிப்பு இருந்தபோதிலும், கிரிமினல் வழக்குகளில் குறைப்பு இல்லை. இந்நிலையில் தற்போது கென்யாவில் இதுபோன்ற ஒரு ஹரிஜன் வரி வழக்கு வெளியாகியுள்ளது. அதாவது பணத் தேவைக்காக ஒரு மனைவி தனது கணவரை விற்றுள்ளார்.

கென்யாவில், ஒரு பெண் தனது கணவர் மற்றொரு ஆணுடன் தனிமையில் இருந்த போது இந்த அதிரடி முடிவினை எடுத்துள்ளார். பின்னர் தனது கணவரினை $.1,132-க்கு அவரது ஆண் காதலரிடமே விற்றுள்ளார். 

எட்னா முக்வானா என அடையாளம் காணப்பட்ட அந்த பெண் முன்னதாக, அவரது கவணரை $.17 அவரது முதல் மனைவி குடும்பத்தாரிடம் இருந்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது. $17 வாங்கப்பட்ட அந்த நபர் தற்போது $.1,132-க்கு மீண்டும் விற்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து எட்னா முக்வானா தெரிவிக்கையில்., எனது கணவரை விற்ற பணத்தில் எனது குழந்தைகளுக்கு புத்தாண்டு ஆடைகளை வாங்கினேன். எனக்கு துரோகம் செய்த கணவனுடன் இருக்க நான் விரும்பவில்லை. என்ற போதிலும் எனது எதிர்வரும் நாட்களை எப்படி கழிப்பது, அதற்கு ஈடாய் அவரது புதிய காதலர் சௌதனிடம் இருந்து இந்த இழப்பீடு தொகையினை பெற்றேன் என தெரிவித்துள்ளார்.

Trending News