பாகிஸ்தானில் தொடர்ந்து கொல்லப்படும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகள்! யார் செய்யும் வேலை!

பாகிஸ்தானில் கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் கொல்லப்பட்டுள்ளான்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2023, 10:00 PM IST
  • பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இந்த மூன்று பயங்கரவாதிகளும் நீண்ட காலமாக இந்திய உளவுத்துறையின் ரேடாரில் இருந்தனர்.
  • பாகிஸ்தான் காவல்துறை இந்த மூன்று கொலைகளின் விசாரணை அறிக்கைகளை மிக ரகசியமாக வைத்துள்ளது.
பாகிஸ்தானில் தொடர்ந்து கொல்லப்படும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகள்! யார் செய்யும் வேலை! title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லாகூரில் பயங்கரவாத அமைப்பின் காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்வாட் கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத ஆசாமிகள் பஞ்சவாட்டின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பரம்ஜித் சிங் பஞ்வாட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், பாகிஸ்தானுக்குள் இனந்தெரியாத ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பயங்கரவாதி இவர் மட்டும் அல்ல. கடந்த ஓராண்டிற்குள், இந்தியா பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்த இதுபோன்ற மேலும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், முதல் பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீனின் உயர்மட்ட தளபதி பஷீர் மிர் என்கிற இம்தியாஸ் ஆலம், இரண்டாவது பயங்கரவாதி ஜெய்ஷ் ஏக் முகமது தீவிரவாதி ஜாகூர் மிஸ்திரி.

யார் அந்த பரம்ஜித் சிங் பன்ஜ்வாட் யார்?

பரம்ஜித் சிங் பன்ஜ்வாட் 1990 முதல் மாலிக் சர்தார் சிங் என்ற பெயரில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார். எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை சப்ளை செய்யும் மோசடியை பன்ஜ்வாட் நடத்தி வந்தார். அவருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பாதுகாப்பு அளித்து வந்தது. பஞ்சாப் மாகாணத்தில் காலிஸ்தானி பிரிவினைவாதத்தை அதிகரிக்கவும், பயங்கரவாத சம்பவங்களை நடத்தவும் ஐஎஸ்ஐ பஞ்வாட்டை பயன்படுத்தியது. ஜூன் 30, 1999 அன்று, அவர் சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பைச் செய்தார். பஞ்சாப் மாநிலம் தர்ன் தரண் மாவட்டத்தில் உள்ள ஜப்பல் கிராமத்தில் வசித்து வந்தவர் பரம்ஜித் சிங். முன்னதாக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சோஹாலில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்தார். 1986 ஆம் ஆண்டு தனது உறவினர் லப் சிங் பயங்கரவாதியாக மாறிய பிறகு காலிஸ்தான் கமாண்டோ படையில் சேர்ந்தார். லப் சிங் இந்திய பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டார், அதன் பிறகு பரம்ஜீத் காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஹிஸ்புல் தீவிரவாதி பஷீர் மிரும் கொல்லப்பட்டான்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் உயர்மட்ட தளபதி பஷீர் மிர் என்ற இம்தியாஸ் ஆலம் இஸ்லாமாபாத்தின் புறநகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆசாமிகளால் கொல்லப்பட்டான். பஷீர் மிர் கொலையாளிகளும் பைக்கில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். பஷீர் மிர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவர். காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கி வந்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளின் ஏவுதளத்தின் பொறுப்பாளராகவும் பஷீர் மிர் இருந்தார். பஷீர் மிர் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையத் சலாவுதீனுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். சலாவுதீன் குறிப்பாக லெபா செக்டரில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் ஏவுதளத்தின் பொறுப்பை மிருக்கு வழங்கியிருந்தார். பஷீர் மிர் இறந்த பிறகு, சையது சலாவுதீனும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். சலாவுதீன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டபோது இந்தியாவுக்கு எதிராக விஷத்தை கக்கினார்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவலை பகிர்ந்த விஞ்ஞானி? - நடவடிக்கை எடுத்த டிஆர்டிஓ

ஜாகூர் மிஸ்திரி தனது கடைக்குள் படுகொலை செய்யப்பட்டான்

ஜாகூர் மிஸ்திரி ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய பயங்கரவாதி. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியதில் அவருக்கும் தொடர்பு இருந்தது. மார்ச் 2022 இல், பாகிஸ்தானின் கராச்சியில் ஜாகூர் மிஸ்திரி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜாஹூர் கராச்சியில் ஜாஹித் அகுந்த் என்ற பெயரில் பதுங்கி இருந்தார். கராச்சியில் உள்ள அக்தர் காலனியில் கிரசண்ட் பர்னிச்சர் என்ற பெயரில் ஷோரூம் நடத்தி வந்தார். பர்னிச்சர் கடைக்குள் புகுந்து கொலை செய்யப்பட்டார். அந்த நேரத்திலும் அடையாளம் தெரியாத பைக்கில் வந்த ஆசாமிகள் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜாகூர் மிஸ்திரியின் இறுதிச் சடங்கில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளான ரவூப் அஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரவூப் அஸ்கர் ஜெய்ஷின் செயல்பாட்டுத் தலைவர் மற்றும் மசூத் அசாரின் சகோதரர்.

பாகிஸ்தானில் இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகள் கொலை

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இந்த மூன்று பயங்கரவாதிகளும் நீண்ட காலமாக இந்திய உளவுத்துறையின் ரேடாரில் இருந்தனர். ஆனால், அவரது கொலைக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை வெளியிட முடியவில்லை. அவர்களது கொலை பரஸ்பர போட்டியின் விளைவாக இருக்கலாம் என்று சிலர் ஊகிக்கிறார்கள். இவர்கள் மூவரும் அவர்களது அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகள். அத்தகைய சூழ்நிலையில், அமைப்பின் பிற நபர்கள் அவரது இடத்தைப் கண்டு பிடிக்க விரும்பினர் எனவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் அவரைக் கொன்றிருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. தற்போது, ​​பாகிஸ்தான் காவல்துறை இந்த மூன்று கொலைகளின் விசாரணை அறிக்கைகளை மிக ரகசியமாக வைத்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல்! 10 பேர் பலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News