Amnesty: தென் கொரியாவின் முதல் பெண் அதிபருக்கு புத்தாண்டு பொதுமன்னிப்பு! காரணம் இதுதான்!!

22 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு புத்தாண்டு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2021, 12:06 PM IST
  • தென் கொரியாவின் முதல் பெண் அதிபருக்கு பொதுமன்னிப்பு!
  • 22 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்கும் பார்க் கியூன் ஹை
  • புத்தாண்டை முன்னிட்டு பொதுமன்னிப்பு
Amnesty: தென் கொரியாவின் முதல் பெண் அதிபருக்கு புத்தாண்டு பொதுமன்னிப்பு! காரணம் இதுதான்!! title=

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்காக 22 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை (Park Geun-hye) புத்தாண்டு பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக பொதுமன்னிப்பு வழங்கப்படும் நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தென் கொரிய நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தென் கொரியாவின் நீதி அமைச்சகம் டிசம்பர் 24 ஆம் தேதி (2021 டிசம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022 ஆம் ஆண்டுக்கு முன்னதாக, முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹை (Park Geun-hye) உட்பட 3094 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்" என்று அரசாங்கம் கூறியது.

தொடர்ச்சியான தோள்பட்டை மற்றும் கீழ் முதுகு அசௌகரியம் காரணமாக பார்க் 2021ஆம் ஆண்டில் மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே அவரது உடல்நிலை காரணமாக பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டதற்குக் காரணம் யோன்ஹாப் செய்தி நிறுவனம் (Yonhap news agency) செய்தி வெளியிட்டுள்ளது.

பதவியில் இருந்தபோது, அவரது தோழி சோய் சூன்-சில் (Choi Soon-sil) அரசின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியதாக அரசியல் ரீதியாக சர்ச்சை ஏற்பட்டதால், 2017 இல் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ALSO READ | சிரிக்க தடை! மதுவுக்கும் தடா விதித்த நாடு!

2013 முதல் 2016 வரை மூன்று முன்னாள் தேசிய புலனாய்வு சேவை தலைவர்களிடமிருந்து மொத்தம் 3.5 பில்லியன் வோன் ($2.9 மில்லியன்) லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்குக் 2018 இல் சிறைத்தண்டனை 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

2013 இல் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்றார் பார்க்.  தோள்பட்டை மற்றும் முதுகுவலி காரணமாக 69 வயதான பார்க் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1952 பிப்ரவரி 2ம் தேதி பிறந்த தென்கொரியாவின் முதல் பெண் அதிபர், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் சுங்-ஹீயின் மகள் ஆவார்.  அவரது தந்தை Park Chung-hee, 1961ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின்போது ஆட்சியைக் கைப்பற்றி 1979ம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

1974 ஆம் ஆண்டு பார்க் கியூன் ஹையின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நாட்டின் முதல் பெண்மணியாகவும் திகழ்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1979 இல் அவரது தந்தை Park Chung-hee பாதுகாப்புத் தலைவரால் கொல்லப்பட்ட பிறகு, நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார் பார்க் கியூன் ஹை.

READ ALSO | பாப் இசையை கேட்டதற்காக 7 பேருக்கு பொது மரண தண்டனை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News