அமெரிக்கா: 30 லட்சம் அகதிகள் வெளியேற்ற டிரம்ப் முடிவு!!

Last Updated : Nov 14, 2016, 11:50 AM IST
அமெரிக்கா: 30 லட்சம் அகதிகள் வெளியேற்ற டிரம்ப் முடிவு!! title=

அமெரிக்காவிலிருந்து 30 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.தற்போது அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் டிவி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்காவில் ஆவணங்கள் எதுவும் இன்றி சட்டவிரோதமாக பலர் குடியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது கிரிமினல் ரெக்கார்டுகள் உள்ளன. ஏறக்குறைய சுமார் 30 லட்சம் பேர் சட்டவிரோதமாக பலர் குடியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக் கப்படுவார்கள் என்றார். 

Trending News