துரோகிகள் சூழ் உலகு; மனைவியின் கடைசி ஆசையை கேட்டு நொந்து போன கணவன்..!!

மரண படுக்கையில் இருப்பவரின் கடைசி ஆசையை நிறைவேற்றவே, அனைவரும் விரும்புவார்கள். ஆனால் ஒரு பெண் தனது கணவரிடம் வெளிப்படுத்திய கடைசி  ஆசையைக் கேட்டு என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 3, 2022, 04:20 PM IST
  • கணவர் சமூக வலைதளங்களில் தனது கதையைப் பகிர்ந்துள்ளார்
  • மனைவி தனது வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் நிலை உள்ளது
  • மரண படுக்கையில் இருப்பவரின் கடைசி ஆசை.
துரோகிகள் சூழ் உலகு; மனைவியின் கடைசி ஆசையை கேட்டு நொந்து போன கணவன்..!! title=

லண்டன்: இறக்கும் தருவாயில் இருந்த பெண்ணின் கடைசி ஆசையைக் கேட்டு அவரது கணவர், நொந்து மன வேதனையில் துடித்துப் போனார். இதுகுறித்து கணவர் சமூக வலைதளங்களில் கூறியது வைரலாகியுள்ளது. 

அந்தப் பெண் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர், அவள் இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என என்றும் மருத்துவர்கள் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். உலகத்திடம் இருந்து விடைபெறுவதற்கு முன், எந்த ஒரு கணவனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை பெண்  கடைசி ஆசையாக கூறியுள்ளார். இது நாள் வரை மனைவியை உண்மையாக நேசித்து வந்தவருக்கு, மனைவியின் கடைசி ஆசை இடியாக இருந்தது.

ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!

சக்கர நாற்காலியில் அதிக நேரம் செலவிடும் அந்த பெண்ணின் கடைசி ஆசை, தனது முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதுதான். இதுபற்றி கணவரிடம் கூறியபோது, ​​அவரது மனம் நொந்து போனது. பெண் ஒரு சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்ற நிலையில் அவரது ஆசையை நிறைவேற்றி வைக்கவும் முடியாமல், பத்து ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையில் அர்த்தம் என்ன எனப் புரியாமல் தவிக்கிறார் . தீவிர நோயின் கடைசி கட்டத்தில் இருக்கும் அந்த பெண் 4 முதல் ஐந்து மாதங்கள் வரை சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் என்றும் எட்டாவது மாதத்தில் படுத்த படுக்கையாக இருப்பார் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | God of Wine: மாயமாய் மறைந்த மதுவின் கடவுள்! 50 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சிலை

வைரலான பதிவில், 'நாங்கள் 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். என் மனைவி கடுமையான நோயுடன் போராடி வருகிறார், இன்னும் 9 மாதங்கள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார். அவள் இல்லாமல் போனால் என்னால் எப்படி வாழ முடியும் என்று தவிக்கும் எனக்கு, அவரது இந்த ஆசை மிக மிக மன வேதனையை தருகிறது. சமீபத்தில் மனைவி தனது கடைசி ஆசையை கணவரிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடைசியாக எனது முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறேன் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

வைரலான பதிவை இங்கே காணலாம்

'என்ன செய்வது என்று தெரியவில்லை' என அந்த பதிவில் அவர் புலம்பியுள்ளார். 
மனைவியின் பேச்சைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்த அந்த கணவன், சமூக வலைதளங்களில் சோகத்தைப் பகிர்ந்துள்ளான். என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அந்த நபர் தவிக்கிறார். மனைவி மகிழ்ச்சியுடன் இருப்பதையே  விரும்பும் அவருக்கு, தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது தர்மசங்கடமான மன வேதனை தரும் விஷயமாக உள்ளது. இந்த வைரலான பதிவிற்கு பலரும் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News