Selfi ஆசையால் 60 அடி பள்ளத்தில் விழுந்து இளைஞர்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் Selfi எடுக்கும் ஆசையில் இளைஞர் ஒருவர் 60 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிருக்கு போராடி வருகின்றார்!

Last Updated : Apr 8, 2018, 09:03 PM IST
Selfi ஆசையால் 60 அடி பள்ளத்தில் விழுந்து இளைஞர்! title=

உத்தரகாண்ட் மாநிலத்தில் Selfi எடுக்கும் ஆசையில் இளைஞர் ஒருவர் 60 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிருக்கு போராடி வருகின்றார்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் பகுதியில் இருக்கும் மானசா தேவி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த இளைஞர் ஒருவர் Selfi எடுக்கும் ஆசையில் 60 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அவருடன் பயணித்த சக பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு படையினர் விரைந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

பள்ளத்தாக்கின் முன்பு நின்று Selfi எடுக்க முயலுகையில் அவரது கால் தவறி கீழே விழுந்ததாக உடன் இருந்தவர்கள் தெரவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Trending News