ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம்-திரிபுரா முதல்வரால் மீண்டும் சர்ச்சை!!

மகாபாரத காலத்திலேயே இணையதள வசதி இருந்தது என்று கூறிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, திரிபுரா முதல்வர் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்!  

Last Updated : Apr 27, 2018, 11:22 AM IST
ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம்-திரிபுரா முதல்வரால் மீண்டும் சர்ச்சை!! title=

இந்தியாவைச் சேர்ந்த டயானா ஹைடனுக்கு உலக அழகிப் பட்டம் 1997-ல் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று திரிபுரா முதல்வர் கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இது குறித்து திரிபுரா முதல் அமைச்சர் பிப்லப் தேப் கூறியதாவது....!

இந்தியாவில் நாம் அனைவரும் பெண்களை லட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் பார்க்கிறோம். 

முன்னதாக உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் இந்தியப் பெண்களைப் பிரதிபலிக்கிறார். 

ஆகையால், அவருக்கு உலக அழகிப் பட்டம் வழங்கப்பட்டது ஏற்ககக் கூடியவையாகும். 

ஆனால், டயானா ஹைடன் என்பர் உலக அழகிப்  பட்டம் பெற எந்த வகையில் பொருத்தம் என்று எனக்கு புரியவில்லை என்றார்.

Trending News