ஜம்மு-காஷ்மீரில் 2ஜி சேவைகள் கூட இல்லை.. 4ஜி இணையத்தை மறந்து விடுங்கள்

மொபைல் இணைய சேவையை தொடர்ந்து இடைநிறுத்துவது மாணவர்கள், மருத்துவர்கள், ஊடக நபர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சேவையாற்றும் பணிகளை பாதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 12, 2020, 11:03 AM IST
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்து நாட்களாக இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
  • மொபைல் இணைய சேவையை தொடர்ந்து இடைநிறுத்துவது மாணவர்கள், மருத்துவர்கள், ஊடக நபர்களை பாதித்துள்ளது.
  • ஆகஸ்ட் 4, 2019 அன்று, பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம், அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்தது.
  • ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் 2ஜி சேவைகள் கூட இல்லை.. 4ஜி இணையத்தை மறந்து விடுங்கள் title=

புது டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 4 ஜி வேக இணையத்தை மீட்டெடுப்பது குறித்து மனுதாரர்கள் எழுப்பிய கருத்துக்களை சிறப்புக் குழு ஆராயும் என்று உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்ட நிலையில், பள்ளத்தாக்கில் கடந்த ஐந்து நாட்களாக இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது. தென் காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் மொபைல் போன் சேவையும் முறிந்து, இது கொரோனா பாதிப்பி காலத்தில் மருத்துவ ஊழியர்களுக்கு பெரும் சிக்கல்களை உருவாக்கி உள்ளது. 

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த மோதலில் ஹிஸ்புல் தளபதி ரியாஸ் நாய்கூ பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து அதிகாரிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் 2 ஜி இணையம் மற்றும் மொபைல் சேவையை நிறுத்தி வைத்தனர். பின்னர், தெற்கு காஷ்மீரில் புல்வாமா மற்றும் ஷோபியன் தவிர மற்ற மாவட்டங்களில் மொபைல் நெட்வொர்க் சேவைகளை அரசாங்கம் மீட்டெடுத்தது. இருப்பினும், காஷ்மீர் முழுவதும் 2 ஜி சேவை தொடர்ந்து முடக்கப்பட்டது.

2 ஜி இணைய சேவையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து புதன்கிழமை மாலை ஒரு கூட்டத்தில் முடிவெடுப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மொபைல் இணைய சேவையை தொடர்ந்து இடைநிறுத்துவது மாணவர்கள், மருத்துவர்கள், ஊடக நபர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சேவையாற்றும் பணிகளை பாதித்துள்ளது.

"ஏற்கனவே கோவிட் -19 காரணமாக மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது, மேலும் இணைய சேவைகளை முறித்துக் கொள்வது மனச்சோர்வை மேலும் அதிகரித்துள்ளது. எங்கள் குழந்தைகள் 4 ஜி சேவையை மீட்டெடுக்கக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் ஆனால் கடந்த ஆறு நாட்களாக 2 ஜி சேவைகளைக் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சபிக்கப்பட்ட இடத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை" என மிகவும் வேதனையுடன் பல்கலைக்கழக பேராசிரியர் கூறினார். 

ஸ்ரீநகரின் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறுகையில், கோவிட் -19 பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை இணைய முற்றுகை கடுமையாக பாதித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் 2 ஜி சேவையை மீட்டெடுத்த பிறகு, தொலைதூர பகுதிகளில் உள்ள மருத்துவர்களை அணுக பெரும் சிரமமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

"கடந்த சில மாதங்களாக நாங்கள் மிகவும் சிறப்பாக இருந்தோம். நாங்கள் மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகளை நிர்வகித்து வந்தோம். பல பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது எவ்வாறு காப்பாற்றுவது என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கி வந்தோம். இப்போது, ​​திடீரென்று, இணைய சேவை முடக்கப்பட்டதால், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள மருத்துவர்களை இணைக்கும் லைஃப்லைனை முறிந்து விட்டது என்று டாக்டர் கூறுகிறார்.

ஆகஸ்ட் 4, 2019 அன்று, பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம், அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதன் பின்னர், பாதுகாப்பு கருதி தகவல் தொடர்பை தடை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக, மத்திய அரசாங்கம் தகவல் தொடர்பு சேவைகளை மீட்டெடுத்தது. ஆனால் அங்கு இணைய சேவை 2 ஜியை விட குறைந்த வேகம் கொண்ட இணைப்பு மட்டுமே உள்ளது. இப்போது, ​​அதுவும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Trending News