மக்களுக்காகப் போராடவே நான் வந்திருக்கிறேன்- விஜயகாந்த்

Last Updated : Jul 22, 2017, 05:01 PM IST
மக்களுக்காகப் போராடவே நான் வந்திருக்கிறேன்- விஜயகாந்த்  title=

கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களைச் சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கதிராமங்கலம் வந்தார். 

அப்போது போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய அவர்:-

கதிராமங்கலத்தில் மக்களுக்குத் தெரியாமலே இந்த திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.

கதிராமங்கலத்துக்கு ஓஎன்ஜிசியைக் கொண்டு வந்ததில் திமுக, அதிமுகவுக்கு பங்கு இருக்கிறது. இங்கு பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக நான் வரவில்லை. மக்களுக்காகப் போராடவே வந்திருக்கிறேன்'' என்றார்.

Trending News