தூத்துக்குடி இரட்டை கொலை: பெண்ணின் தந்தை கைது! மற்றவர்களுக்கு காவல்துறை ஸ்கெட்ச்..!

தூத்துக்குடியில் திருமணம் முடிந்த 3-நாட்களில் காதல் ஜோடியை  வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை பிடிக்க 3-தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 3, 2023, 09:25 AM IST
  • தூத்துக்குடி இரட்டை கொலை
  • தந்தையை கைது செய்தது காவல்துறை
  • தொடர்புடையவர்களுக்கு வலைவீச்சு
தூத்துக்குடி இரட்டை கொலை: பெண்ணின் தந்தை கைது! மற்றவர்களுக்கு காவல்துறை ஸ்கெட்ச்..! title=

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சார்ந்த வசந்தகுமார் மகன் மாரிசெல்வம்(23). இவர் சிப்பிங் கம்பெணி ஒன்றில் பணியில் இருந்துள்ளார். இவரும்  தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சார்ந்த கார்த்திகா(23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக  காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு கார்த்திகா தரப்பில் அவரது பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் ஒரே பகுதியில் வசித்து வந்த மாரிசெல்வம் குடும்பத்தினர் கார்த்திகா குடும்பத்தின் மிரட்டலின் பேரில் அந்த பகுதியில் இருந்து காலி செய்து முருகேசன் நகர் பகுதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர்தான் குடியேறி உள்ளனர்.

மேலும் படிக்க | தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை... திருமணமாகி 3 நாள்களில் கொடூரம்!

இந்நிலையில்  கடந்த 3-நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேவர்ஜெயந்தி அன்று கார்த்திகா வீட்டை விட்டு ஒடிவந்து மாரிசெல்வத்தை கோவில்பட்டியில் வைத்து திருமணம் செய்துள்ளார். இருவரும் திருமணம் முடித்து மாரிசெல்வம் வீட்டில் அவரது தாய் தந்தையுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இளம் தம்பதிகள் இருவரும் வீட்டில் இருக்கும்போது திடீரென மூன்று மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த கும்பல் ஒன்று கடுமையான ஆயுதங்களை கொண்டு மாரிசெல்வம், கார்த்திகா ஆகிய இருவரையும் சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை முடிக்கிவிட்டதுடன், 3 தனிப்படைகள் தப்பிசென்ற குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்டன. முதல்கட்ட தேடுதல் வேட்டையில் மணப்பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சந்தேகத்தின்பேரில் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News