TN Rain Update: மீண்டும் ஆரம்பம்; முக்கிய அப்டேட் தந்த வானிலை மையம்

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 01:21 PM IST
TN Rain Update: மீண்டும் ஆரம்பம்; முக்கிய அப்டேட் தந்த வானிலை மையம் title=

சென்னை: இந்த ஆண்டு பருவமழை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. டிசம்பர் மாதத்திலும், தொடரும் மழையால், தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கைகளை பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. 

அதன்படி வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக 16.12.2021, 17.12.2021 தேதிகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

ALSO READ | ஓமிக்ரான் அச்சம்! தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு!

அதேபோல் 18.12.2021, 19.12.2021 தேதிகளில் தென் மாவடங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை (Weather Forecast) பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

20.12.2021 தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேசமயம் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

  • நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 4, 
  • திருக்குவளை (நாகப்பட்டினம்) 3, 
  • திருப்பூண்டி (நாகப்பட்டினம்), 
  • கோடியக்கரை (நாகப்பட்டினம்) தலா 2, 
  • தொண்டி (ராமநாதபுரம்),
  • திருத்துறைப்பூண்டி திருவாரூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
16.12.2011 முதல் 20.12.2021 வரை: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாளை (17 ஆம் தேதி) தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாககூடும்.

இதன் காரணமாக 17.12.2021 முதல் 19.12.2021 வரை: பூமத்திய ரேகை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ALSO READ | சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா: ஓமிக்ரான் தொற்றா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News