10 வயது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தந்தை!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் 10 வயது சிறுமியை தந்தை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 18, 2021, 07:11 PM IST
10 வயது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தந்தை! title=

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

தற்போது குழந்தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர். காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்தோணி ராஜ் மற்றும் சுஜா வேலை பார்த்து வருகின்றனர். அவர்களது குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். 

சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டு வேலை சரிவர செய்யவில்லை என்று ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் வீட்டில் இருந்த மகேஸ்வரி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து உள்ளார். இதனால் அலறித் துடித்த மகேஸ்வரி தன்னை காப்பாற்றும்படி தந்தை அந்தோணிராஜை கட்டி பிடித்துள்ளார். 

ALSO READ |  காஞ்சிபுரத்தில் பட்டா கத்தியுடன் கடைக்குள் ரவுடிகள் அட்டகாசம்: பொதுமக்கள் அதிர்ச்சி

இதனிடையே சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீப்பற்ற வைத்த அந்தோணிராஜுக்கும் காயம் ஏற்பட்டது. அவரும்  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

மகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 10 வயது சிறுமியை தந்தை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல ஒரு சம்பவம் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வழக்கறிஞரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் சந்தேகத்திற்குரிய 4 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

ALSO READ |  Crime News: தேனி: முன் விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டிக் கொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News