தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய சீருடை அறிமுகம்!!

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகம்!!

Last Updated : May 20, 2019, 02:04 PM IST
தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய சீருடை அறிமுகம்!! title=

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகம்!!

புதிய கல்வித்திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பல புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கரும்பச்சை நிறத்தில் கால் சட்டையும், இளம் பச்சை நிறத்தில் கட்டமிட்ட மேல் சட்டையும் வழங்கப்படும் எனவும், மாணவிகளுக்கு இதே நிறத்தில் புதிய சீருடை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சந்தன நிற வண்ணத்தில் கால் சட்டையும், அதே நிறத்தில் கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் வழங்கப்படுகிறது. இதில் மாணவிகளுக்கு சந்தன நிறக் கோட்டுடன் கூடிய சீருடை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பள்ளிச் சீருடைகள், மாணவ, மாணவியரின் மனதை கவரும் வகையில் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Trending News