NO Third Language: இந்திக்கு நஹி சொன்ன தமிழகம் இருமொழிக் கொள்கையே தொடரும்

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்விதுறை அறிவித்துவிட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 24, 2022, 08:46 PM IST
  • தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும்
  • தமிழக பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு
  • மூன்றாம் மொழியாக இந்தி இல்லை
NO Third Language: இந்திக்கு நஹி சொன்ன தமிழகம் இருமொழிக் கொள்கையே தொடரும் title=

சென்னை: இருமொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெளிவாக கூறிவிட்டது. 

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

தமிழக பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் கற்பிக்கப்படும். மூன்றாவது மொழிக்கு இடம் இல்லை. மூன்றாவது மொழியை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்று அரசு கூறுகிறது.

முன்னதாக, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றித் துவங்கியுள்ளதாக செய்திகள் உலா வந்தன. 

மேலும் படிக்க | பெரிய கலைஞர்களுக்கு சமூக பொறுப்பு முக்கியம்' - இளையராஜாவுக்கு குட்டு வைத்த பா.ரஞ்சித்

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயம் என்பதே நடைமுறையில் இருக்கிறது என்று  பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் இன்று (24/04/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றித் துவங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா

தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக் கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது.

2006- ஆம் ஆண்டின் தமிழ்நாடு (தமிழ்மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக கற்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. எனினும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்தம் தாய்மொழியையும், விருப்பப்பாடமாகப் படித்து, தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

எனவே, தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழி பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்" என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, 13% டிஏ ஹைக் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News