ரேஷன் அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இல்லை ஏன்? தமிழக அருசு பதில் அளிக்க உத்தரவு

பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 11, 2023, 04:40 PM IST
  • செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்
  • எச்சரிக்கை வாசகம் இல்லை என புகார்
  • தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
ரேஷன் அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இல்லை ஏன்? தமிழக அருசு பதில் அளிக்க உத்தரவு title=

மத்திய அரசு திட்டத்தின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் துவங்கப்பட்டுள்ளது. இந்த அரிசியை மத்திய அரசின் விதிகளின்படி, தலசீமா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இதை உண்ண வேண்டும். ஆனால் அப்படியான எச்சரிக்கை வாசகம் ஏதும் இல்லாமல் அரசி விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் படிக்க | மக்களுக்கு இன்ப அதிர்ச்சி: சரசரவென சரிந்தது தக்காளியின் விலை! ஒரு கிலோ இவ்வளவு கம்மியா?

அதில், தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் துவங்கப்பட்டுள்ளது. இந்த அரிசியை மத்திய அரசின் விதிகளின்படி, தலசீமா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இதை உண்ண வேண்டும். ஆனால் அப்படியான எச்சரிக்கை வாசகம் ஏதும் இல்லாமல் அரசி விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பான எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

மேலும், சட்டவிதியின் படி உரிய எச்சரிக்கை வாசங்களுடன் மட்டுமே செறிவூட்டப்பட்ட அரசி பொது வினியோகத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும்,  இதைப் பின்பற்றாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அரிசி அடைக்கப்பட்டுள்ள கோணிப்பையில் இந்த எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோணிப் பையில் உள்ள எச்சரிக்கை வாசகம் நுகர்வோருக்கு எப்படி தெரியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து செப்டம்பர் 21ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க | உயர் கல்வி படிக்க செல்லும் தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News