போதிய நீர் வந்ததும் மேட்டூர் ஆணை திறப்பு -எடப்பாடி பழனிசாமி!

மேட்டூர் அணைக்கு போதிய நீர் வந்தவுடன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jun 18, 2018, 01:00 PM IST
போதிய நீர் வந்ததும் மேட்டூர் ஆணை திறப்பு -எடப்பாடி பழனிசாமி! title=

மேட்டூர் அணைக்கு போதிய நீர் வந்தவுடன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்!!

அதிமுக சார்பில் நடத்தப்படும் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கு பொதுக்கூட்டம் டெல்டா மாவட்டங்களில் ஜூன் 18 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, இதன் முதல்கட்டமாக வெற்றி விளக்கு பொதுக் கூட்டம் மயிலாடுதுறையில் இன்று துவங்கியது.  

இந்த கூட்டம் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டு எடுத்தது குறித்து முதலமைச்சர் சிறப்புரையாற்றுகிறார். 

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்..! 

மேட்டூர் அணைக்கு போதிய நீர் வந்தவுடன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தால் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தங்கதமிழ்ச் செல்வன் வந்தால் அதிமுக சேர்த்துக்கொள்ளத் தயாராகத்தான் இருப்பதாகவும்; சட்டப்படி அமைச்சர் பதவி தர இயலாது என்றும் தெரிவத்துள்ளார். 

 

Trending News