தமிழக சட்டசபை: லோக் ஆயுக்தா சட்ட மசோதா தாக்கல்!

தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார்.

Last Updated : Jul 9, 2018, 12:58 PM IST
தமிழக சட்டசபை: லோக் ஆயுக்தா சட்ட மசோதா தாக்கல்! title=

தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார்.

கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மே மாதம் 29 முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும், 110-வது விதியின் கீழ் தமிழக முதல் அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதில்,

ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். மேலும் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கினார். இதையடுத்து சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது.

Trending News