8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசு நிலைப்பாடு என்ன? -உச்சநீதிமன்றம்!

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

Last Updated : Jul 22, 2019, 02:54 PM IST
8 வழிச்சாலை திட்டத்தில் மத்திய அரசு நிலைப்பாடு என்ன? -உச்சநீதிமன்றம்! title=

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

முன்னதாக சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாணையின் போது நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.

இதையடுத்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை தற்போது நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் 8 வழிச்சாலைக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள் என்றும் கேள்வி எழுப்பியது.

அதோடு இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாட்டை நாளை காலைக்குள் மத்திய நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

Trending News