நிஜாமுதீன் மார்க்கஸில் பங்கேற்ற 6 தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்...

தங்கள் விசா விதிமுறைகளை மீறியதாக கூறி ஆறு தாய்லாந்து பிரஜைகள், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்கள் கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்தனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Last Updated : Apr 28, 2020, 01:42 PM IST
நிஜாமுதீன் மார்க்கஸில் பங்கேற்ற 6 தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்... title=

தங்கள் விசா விதிமுறைகளை மீறியதாக கூறி ஆறு தாய்லாந்து பிரஜைகள், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்கள் கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்தனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.

மாவட்டத்தில் உள்ள பெருந்துரை IRT அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர்கள் சென்னை புழல் சிறைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட ஆறு தாய்லாந்து பிரஜைகளும் காவல்துறை பாதுகாப்புடன், திங்கள்கிழமை இரவு புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IPC தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றும் மருத்துவமனையின் தனிமை வார்டுக்கு வெளியே காவல்துறை பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் தாசில்தார், காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாக்களை வைத்திருந்த தாய் நாட்டினர், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தது அறிந்தும் இஸ்லாமிய பிரசங்கத்தில் ஈடுபட்டனர் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில், ஏழு தாய்லாந்து நாட்டினரை அங்கமாக கொண்ட ஒரு குழு மூன்று வாரங்களுக்கு முன்பு இங்கு வந்து, கொல்லம்பாளையம் வீட்டுவசதி அலகு வளாகத்தில் தங்கி, பிரசங்கத்தில் ஈடுபட்டது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஒருவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுநீரக நோய் காரணமாக இறந்தார்.

மீதமுள்ள ஆறு பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மற்றும் பிரசங்க அமர்வுகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பிறரின் பாரிய தொடர்புத் தடத்தைத் தொடங்க அதிகாரிகளைத் தூண்டினர் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

Trending News