சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சாந்தன் மரணம்! அதிகாரபூர்வ அறிவிப்பு

Santhan Death News Update : ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்புடைய சாந்தன், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மரணம்.... கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2024, 09:29 AM IST
  • ராஜீவ் காந்தி கொலை வழக்கு
  • சாந்தன் மருத்துவமனையில் மரணம்
  • சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சாந்தன் மரணம்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சாந்தன் மரணம்! அதிகாரபூர்வ அறிவிப்பு title=

சென்னை: கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்புடைய சாந்தன் மருத்துவமனையில் மரணமடைந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கை தமிழரான சாந்தனுக்கு கடந்த ஜனவரி 24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். சாந்தன் இறப்பு தொடர்பாக ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பத்திரிகையாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.

கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது. 

மேலும் படிக்க | மத்திய அரசிற்கு அனுப்பப்பட்ட சாந்தன் வழக்கு தொடர்பான ஆவணங்கள் எங்கே? 

யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் சாந்தனின் தாயார், தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும்படி தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், உடல் ஆரோக்கியம் குன்றியுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் சாந்தன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளை பிப்ரவரி 29ம் தேதி நடைபெறவிருந்தது. இன்று சாந்தன் மரணத்திற்கு பிறகு அந்த வழக்கு விசாரணை பயனற்றுப் போய்விட்டது.

உடல் ஆரோக்கியம் குன்றியுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் சாந்தன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று சாந்தனுக்கு அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை விதிகளை மீறினால் சிக்கல்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News