தடியடியால் காயமடைந்த மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய சீமான்

Last Updated : Oct 26, 2017, 06:20 PM IST
தடியடியால் காயமடைந்த மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய சீமான்  title=

காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கடந்த 23-10-2017 அன்று விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தைக் கலைக்க சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

காசிமேடு மீனவர் பகுதிக்குச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தடியடியில் காயமடைந்த மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Trending News