சசிகலா கணவர் நடராஜன் அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ்

உயர் ரத்த அழுத்தம், கை நடுக்கம், உடல் சோர்வு மற்றும் அசதி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் (எம்.நடராஜன்) நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Last Updated : Feb 11, 2017, 02:38 PM IST
சசிகலா கணவர் நடராஜன் அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ் title=

சென்னை: உயர் ரத்த அழுத்தம், கை நடுக்கம், உடல் சோர்வு மற்றும் அசதி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் (எம்.நடராஜன்) நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடராஜனுக்கு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்ப டாக்டர் பிரம்மானந்தம் அப்பல்லோ கொண்டு வந்து சேர்த்தார். ஜெயலலிதா போன்ற வி.ஐ.பி.,க்கள் அனுமதிக்கப்படும் 'எல்' வார்டில் அனுமதிட்டார். அவருக்கு டாக்டர்கள் கே.ஆர்.பழனிச்சாமி, சத்தியமூர்த்தி, ஆகிய இருதய நோய் நிபுணர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்தது. 

நடராஜனுக்கு இசிஜி, எக்கோ, எம் .ஆர். ஐ. ஆகிய சோதனைகள் செய்யப்பட்டன. அவருடன் நடராஜனின் மூத்த சகோதரர் ராமச்சந்திரன், டாக்டருமான அவரது மூத்த சகோதரரின் மகன் ஆகியோர் உடனிருந்தனர். 

தற்போது உடல்நலம் தேறியதையடுத்து நேற்று இரவு 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Trending News