15 நாட்கள் பரோலில் விரைவில் வெளிவருகிறார் சசிகலா: தினகரன்

சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டுள்ளோம். நிச்சயம் பரோல் கிடைத்து, வெளியே வருவார். 

Last Updated : Oct 2, 2017, 12:59 PM IST
15 நாட்கள் பரோலில் விரைவில் வெளிவருகிறார் சசிகலா: தினகரன் title=

சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று டிடிவி தினகரன் பேசியதாவது:-

போதிய எம்.எல்.ஏ ஆதரவு இல்லாததால் ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியிருக்கலாம். காவல்துறையை கையில் வைத்திருப்பதால் வழக்குகள் தொடர்வதாக குற்றம்சாட்டினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டுள்ளோம். நிச்சயம் பரோல் கிடைத்து, வெளியே வருவார். சசிகலாவை தூக்கி எறிந்துவிட்டார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்போது ஆட்சி கவிழும்.

டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதுபோல் இவர்கள் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Trending News