சிறை செல்ல அவகாசம்: சசிகலா சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல்!

Last Updated : Feb 15, 2017, 10:27 AM IST
சிறை செல்ல அவகாசம்: சசிகலா சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல்! title=

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனையை சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. ஜெயலலிதா மறைந்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. 

மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்து ஐகோர்ட் நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். 

இந்நிலையில் தாங்கள் சரணடைய கால அவகாசம் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனர். நீதிபதிகள் பிசி கோஷ், அமித்வா ராய் முன்னிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் இன்று காலை 10.30 மணிக்கு சரணடைய கால அவகாசம் கோரும் மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். 

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனின் சொத்து குவிப்பு நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்தே உச்சநீதிபதிகள் பிசி கோஷ், அமித்வா ராய் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்திருந்தனர். இன்று அதே நீதிபதிகள் முன்னிலையில் சரணடைவதற்கு அவகாசம் கோரி சசிகலா மனுத்தாக்கல் செய்ய உள்ளார். 

Trending News