விஷால், தீபாவை டிவிட்டரில் நக்கல் செய்யும் எச்.ராஜா

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால், தீபாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது,

Last Updated : Dec 6, 2017, 08:41 AM IST
விஷால், தீபாவை டிவிட்டரில் நக்கல் செய்யும் எச்.ராஜா  title=

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால், தீபாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது,

விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. அரசியலில் இன்னும் பாலபாடம் கற்கவில்லை என்று தெரிகிறது. என்று தெரிவித்துள்ளார். 

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு  தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நாள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. நேற்று அந்த வேட்புமனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன. இதற்காக விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டங்களை செய்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது. 

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. அரசியலில் இன்னும் பாலபாடம் கற்கவில்லை என்று தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News