ஆர்கேநகர் தேர்தல் தேதி டிச., 31க்குள் அறிவிக்க வேண்டும்: ஐகோர்ட்

ஆர்கேநகர் சட்டசபை தொகுதி தேர்தல் தேதி டிசம்பர் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

Last Updated : Dec 21, 2017, 02:13 PM IST
ஆர்கேநகர் தேர்தல் தேதி டிச., 31க்குள் அறிவிக்க வேண்டும்: ஐகோர்ட் title=

ஆர்கேநகர் சட்டசபை தொகுதி தேர்தல் தேதி டிசம்பர் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கேநகர் தொகுதி காலியாக உள்ளது. இங்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையொட்டி ஆர்கேநகரில் விரைவில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி கே.கே.ரமேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 31-ம் தேதிக்குள், ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Trending News