பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கனிமொழி கோரிக்கை!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யாதது வேதனை அளிக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்!  

Last Updated : Jun 17, 2018, 04:12 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கனிமொழி கோரிக்கை! title=

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யாதது வேதனை அளிக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளுக்கு வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். அங்கு அவர்கள் மிகவும் கொடுமையான தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே, கருணை அடிப்படையில் இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தன. 

ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது. அதேபோல் இன்று 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தற்போது 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து கூறும்போது,,!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விரைந்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Trending News