பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்: திருமாவளவன்

பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2019, 11:24 AM IST
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்: திருமாவளவன் title=

தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 18 அன்று தேர்தல்கள் நடைபெற்றது. அப்பொழுது சில இடங்களில் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தேறியது. அதில் குறிப்பாக சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வசித்து வந்த தலித் மக்கள் மீது சில ஆதிக்சாதியினை சிலர் தாக்குதலை நடத்தினார்கள். சுமார் 120-க்கு மேற்ப்பட்ட ஆதிக்சாதியை சேர்ந்த கும்பல் அருவாள், கத்தி, உருட்டுக்கட்டை எடுத்துக்கொண்டு பொன்பரப்பி கிராமத்தில் புகுந்து தலித் வீடுகளை அடித்து நொறுக்கினார்கள். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பெண்களின் ஆடைகளை பிடித்து இழுத்துள்ளனர். இதில் பலருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் அந்த கும்பலை தலித் மக்கள் சாதியை குறித்து கேவலமாகவும், ஆபாசமாகவும் பேசியது குறித்த காணொளி சமூக ஊடங்களில் வெளியாகின. 

இந்த வன்முறை சம்பவத்தில் கிட்டத்தட்ட ஒரு கிராமமே அடித்து நொறுக்கப்பட்டது. 100-க்கு மேற்ப்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அதில் 20 வீடுகள் முழுவதும் நொறுக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் பேனரும் கிழித்துள்ளனர். இதில் ஒரு பத்திரிக்கையாளரும் மிகவும் கொடுமையான முறையில் தாக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. சம்பவத்தில் காயம் அடைந்த 10-க்கு மேற்ப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவத்துக்கு காரணமாக இதுவரை 25-க்கு மேற்ப்பட்டோர் கைது செய்து வழக்கு போடப்பட்டு உள்ளது. பலர் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு உள்ளானவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

இந்நிலையில் பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடந்த உள்ளோம் எனக் கூறினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

Trending News