உருவாகிறது புயல்... பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல்படையினர் தயார் நிலை!!

பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல்படையினர் தயார் நிலையில் இருக்க காவல்துறை டிஜிபி உத்தரவு!!

Last Updated : Apr 26, 2019, 08:55 PM IST
உருவாகிறது புயல்... பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல்படையினர் தயார் நிலை!! title=

பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல்படையினர் தயார் நிலையில் இருக்க காவல்துறை டிஜிபி உத்தரவு!!

தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் - வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தது.

இந்நிலையில், வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்.30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- “ காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னை தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு  தென்மேற்கே 1760 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது .

அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30 ஆம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும். வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல்படையினர் தயார் நிலையில் இருக்க காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளது. 

 

Trending News