அதிமுக வங்கி கணக்கை முடக்க வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க கோரி அதிமுக பொருளாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதம் குறித்து பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Feb 9, 2017, 01:50 PM IST
அதிமுக வங்கி கணக்கை முடக்க வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம் title=

சென்னை: அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க கோரி அதிமுக பொருளாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதம் குறித்து பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவுக்கு எதிராக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அமைதிப் புரட்சியை அரங்கேற்றியுள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்கக் கோரி மயிலாப்பூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். 

அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார். தனது உத்தரவு இல்லாமல் கணக்கை இயக்கக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து தற்போது வங்கி அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

முதல்வரின் கோரிக்கையை ஏற்று வங்கிக் கணக்கை முடக்கி வைக்கும் முடிவுக்கு அவர்கள் வரக்கூடும் என்று தெரிகிறது.  

Trending News