நித்யானந்தாவின் சீடர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை! Facebook-ல் லைவ்!!

நித்யானந்தாவின் சீடர் ஒருவர், தனது வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

Last Updated : Mar 7, 2020, 02:45 PM IST
நித்யானந்தாவின் சீடர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை! Facebook-ல் லைவ்!! title=

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அந்த பகுதியில் செருப்புக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் இருந்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் - கலையரசி தம்பதி. இவர்களுக்கு தினேஷ் (வயது 27) என்ற மகனும், ராஜேஸ்வரி, ரம்யா ஆகிய 2 மகள்களும் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களூரு ஆசிரமத்தில் சேர்ந்தார் தினேஷ்.

7 மாதங்கள் நித்யானந்தாவின் சீடராக இருந்த தினேசை அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். பின்னர் தான் அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தினேஷ் ஆறகளூர் வந்தார். பின்னர் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று விட்ட நிலையில் தனியாக இருந்த தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை 10 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சமையலைறையில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் துாக்குக் கயிறை மாட்டியவாறு தனது முகநுால் பக்கத்தில் லைவ் வீடியோவை வெளியிட்டார் தினேஷ்.

தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் பேஸ்புக் வீடியோ லைவில். , நான் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் தவறான தகவலை கூறி எங்களை பிரித்து விட்டனர். அதில் உண்மை இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியாததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Trending News