மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நொடிக்கு 23000 கனஅடி-யாக உயர்ந்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2018, 08:32 PM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு! title=

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நொடிக்கு 23000 கனஅடி-யாக உயர்ந்துள்ளது!

இன்று காலை 8 மணியளவில் நொடிக்கு 5023 கனஅடி-யாக இருந்த சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து தற்போது படிப்படியாக அதிகரித்தது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை 5 மணி நிலவரப்படி நொடிக்கு 23000 கனஅடி-யாக உயர்ந்துள்ளது. பாசனத்துக்காக அணையில் இருந்து நொடிக்கு 22000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய்களில் நொடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.47 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 70.75 டிஎம்சியாக உள்ளது.

Trending News