மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டம்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 29, 2024, 11:28 AM IST
  • ஒத்தக்கடை தாக்குதல் சம்பந்தம் தொடர்பான சிசிடிவி காட்சி.
  • மூன்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
  • இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டம் title=

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் இருந்தவர்கள் அந்த வழியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். மேலும் அந்த நபர் தாக்கியதை தட்டி கேட்ட அருகில் உள்ள கடை உரிமையாளரை அந்த கும்பல் தாக்கியதோடு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சென்றுள்ளனர்

ஏற்கனவே இதே போன்ற கும்பல் பைக்கில் செல்லும் நபர் ஒருவரை அடித்து உதைத்து காயப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில் மேலும் தற்போது தாக்குதல் நடத்தக்கூடிய கூடுதலான சிசிடிவி கட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | ஆவடி அருகே சித்த மருத்துவ தம்பதியர் இருவர் கழுத்தை அறுத்துக் கொலை!

ஒத்தக்கடை தாக்குதல் சம்பந்தம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கில் மூன்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல்வேறு கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒத்தக்கடை பகுதியில் அதிகளவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்ம் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இதுபோன்று போதை நடமாட்டத்துடன் திரியும் இளைஞர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யப்பட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்த கோரிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News