ரகசிய கோப்புகள் சூறையாடல்... லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாகத்துறை பகீர் புகார் - முழு விவரம்!

ED Complaint To TN DGP: அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் சட்ட விரோதமாக சூறையாடப்பட்டதாக அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்தது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 3, 2023, 04:39 PM IST
  • 6 பேருக்கு மட்டுமே தேடுதலுக்கு அனுமதி இருந்தது - அமலாக்கத்துறை
  • ஆனால் 35 பேர் அலுவலகத்தில் தேடினர் - அண்ணாமலை
  • 35 பேர் காவல்துறையை சேர்ந்தவர்களா அல்லது தனி நபர்களா என தெரியவில்லை - அமலாக்கத்துறை
ரகசிய கோப்புகள் சூறையாடல்... லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாகத்துறை பகீர் புகார் - முழு விவரம்! title=

ED Complaint To TN DGP: அமலாக்கத்துறை அலுவலகத்தில் சட்ட விரோதமாக அத்துமீறி நுழைந்து உள்நோக்கத்தோடு முக்கிய கோப்புகளை களவாடி சென்றதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் மீது தமிழக காவல் துறை தலைவரிடம் அமலாக்கத்துறை தரப்பில் புகார் அளித்துள்ளது. 

பல்வேறு வழக்குகள் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை திருடி சென்றதோடு, பல்வேறு  வழக்குகளின் விசாரணையை பாதிக்கும் வகையில், பல ஆவணங்களை அலைபேசி மற்றும் பல மின்னணு சாதங்களின் மூலம் படம் பிடித்து நகல் எடுத்து சென்றுள்ளனர் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளது.

கைதான அங்கித் திவாரி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சுரேஷ் பாபு  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018இல் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர் சுரேஷ் பாபுவிடம் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக ரூ.3 கோடி லஞ்சம் தருமாறு மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி கூறியுள்ளார்.

திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி  தலைமையிலான காவல் துறையினர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரில் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: 110 கிமீ வேகத்தில் கரையை கடக்குமாம்..! இந்த மாவட்ட மக்கள் கொஞ்சம் உஷார்

மதுரையில் ரெய்டு

தொடர்ந்து, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால் அங்கு சோதனை நடத்த மறுக்கப்பட்டது. பின்னர் அங்கித் திவாரி அலுவலகத்தில் மட்டும் சோதனை நடத்த அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை அமலாக்கத் துறையின் மண்டல துணை இயக்குநரான பிரிஜேஷ் பெனிவால் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இவர் லஞ்ச ஒழிப்பு துறை மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். zeenews.india.com/tamil/videos/475604

தேடலில் ஈடுபட்ட 35 பேர் 

அந்த புகாரில், "அமலாக்கத் துறை அலுவலகத்தின் உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் எப்ஐஆர் நகலை எங்களிடம் காட்டவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அடையாள அட்டையை காட்டவில்லை. தேடுதல் உத்தரவையும் காட்டவில்லை. சீருடை இல்லை, பேட்ஜ் இல்லை. 

சத்தியசீலன் காவல் துணை கண்காணிப்பாளர் மட்டுமே தன் அடையாளத்தை வெளிப்படுத்தினார். மொத்தமாக 35 பேர் இருந்தனர்ஸ ஆனால் 4 அதிகாரிகள் இரண்டு சாட்சிகள் மொத்தம் 6 பேருக்கு மட்டுமே  தேடுதலுக்கு அனுமதி பெற்றிருந்தனர்.

போலீசாரால் சூறையாடப்பட்டது

டிச.1ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல், டிச. 2ஆம் தேதி காலை 7.15 வரை அவர்கள் தொடர்ந்து சோதனை செய்தனர். நாங்கள் கேள்வி கேட்டும் அவர்கள் காதில் வாங்கவே இல்லை. அங்கித் திவாரி அறைக்குள் நுழைந்தனர். அங்கித் திவாரி  வழக்கில் சம்மந்தம் இல்லாத கோப்புகளையும் திறந்து பார்த்தனர். அமலாக்கத் துறையின் பல ரகசிய ஆவணங்களையும் ஆராய்ந்தனர்.

இடையிடையே அங்கி திவாரையின் அறை பூட்டப்பட்டது. அதன் மூலம் அமலாக்கத்துறையின் கோப்புகள் தனிப்பட்ட ரீதியில் அவர்களால் பார்க்கப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலகம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் சூறையாடப்பட்டது. அவர்கள் தொடர்ந்து யாரோ சிலரிடம் உத்தரவைப் பெற்று தகவல்களை தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள்.

எத்தனை திருட்டு போனது?

மேல் இடத்தில் இருந்து வரும் அழுத்தம் காரணமாகவே இதுபோன்று செய்வதாக அவர்கள் சொன்னார்கள். மொத்தம் நான்கு அதிகாரிகள் மற்றும் இரண்டு சாட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் ஆனால் மொத்தம் 35 பேர் இருந்தார்கள், அவர்கள் யார் என தெரியவில்லை. அந்த 35 பேர் காவல்துறையை சேர்ந்தவர்களா அல்லது தனி நபர்களா என தெரியவில்லை. எத்தனை ஆவணங்கள் திருடு போனது, எத்தனை ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை இதுவரை  உறுதி செய்ய முடியவில்லை.

எடுத்து செல்லப்பட்ட அந்த ஆவணங்கள்  தவறான வழியில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மாநிலத்தில் அதிகாரம் மிக்கவர்களை அமலாக்கத் துறை விசாரித்து வரும் நிலையில் சாட்சிகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளபோது இது போன்று நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கை சட்டவிரோதமானது. பல்வேறு ரகசிய ஆவணங்களை திருடி சென்றதற்கும், இது போன்ற நடவடிக்கைக்கும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை-தனியார் நிறுவனங்களுக்கு லீவ்!!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News