கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?

கோவையில், புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தற்கொலைக்கு பின்னால் உள்ள காரணம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Apr 22, 2024, 11:07 AM IST
  • கோவை புலனாய்வு அதிகாரி தற்கொலை
  • குடும்ப பிரச்சனை காரணமா?
  • தீவிர விசாரணையில் போலீஸார்
கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன? title=

சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை காவலர், கணபதி மாநகரை சேர்ந்தவர் பாலகுமார். இவருக்கு 38 வயதாகிறது. இவரது மனைவி தாஜ் குழும ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பதவி உயர்வு கிடைத்ததை அடுத்து, 15 நாட்களுக்கு முன்பாக லண்டனில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு வேலைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். 

இவர், வெளிநாட்டிற்கு சென்றுள்ளதால், தனது இரண்டு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார். இதையடுத்து, பாலகுமார் தனது மனைவியுடன் தொலைபேசியில் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பணியில் கலந்து கொண்ட அவர், கடந்த ஏப்ரல் 20ம் தேதி காலை வீட்டிற்கு திரும்பினார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வேலைக்கு வராததாக தெரிகிறது.

மேலும் படிக்க | 'கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்...' அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் - இபிஎஸ் நறுக்

மேலும், அவரது பெற்றோர்களாலும் அவரை அணுக முடியாமல் போயிருக்கிறது. இதையடுத்து, அவர்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டனர் அதனை தொடர்ந்து போலீஸார் நேற்று இரவு வீட்டிற்கு விரைந்தனர். அப்போது பாலகுமார் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதை கண்டறிந்துள்ளனர். 

பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். உயிரிழந்த பாலகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இவரது இறப்பிற்கு பணிச்சுமை காரணமா எனும் கண்ணோட்டட்த்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News